Headlines

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்புக்கு எதிராக குரல் கொடுப்போர் யார்?

புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பிற்கு எதிராக குரல் கொடுப்போர் பற்றி அம்பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கோரியுள்ளது. புகையிலை உற்பத்தி வரி அதிகரிப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்துள்ளார். புகையிலை பொருள் அடங்கிய உற்பத்திகளுக்கான வரியை 90 வீதமாக உயர்த்துமாறு சில மாதங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அறிவுறுத்தல் இதுவரையில்…

Read More

உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40 இற்கு உயர்வடைந்துள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வரி வசூலில் அரசாங்கத்திற்கு வெற்றி!

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைப்புக்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் ரூபா 769.75 பில்லியன்இலாபம் பெறப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபா 625,867 பில்லியன் வருமானம் இந்த மூன்று அமைப்புக்கள் மூலம்கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான தொழிற்சாலைகள் மூலமும் வருவாய் அதிகரித்து வருவதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள்…

Read More

எதிர்வரும் 11ம் திகதி பொதுமக்களுக்கு சிக்கலான நாள்!- விமல்

எதிர்வரும் 11ம் திகதியானது இலங்கை மக்களுக்கு மிகவும் சிக்கலான நாள் என்றுபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசானது சர்வதேசத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயல்படுவதாகவும்அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். அரசு சர்வதேசத்திற்கு அமைய செயற்படுவதாலேயே பொருளாதாரத்தில் சரிவைஎட்டியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மீது பெரும் சுமையை தினிப்பதன் பொருட்டு பாராளுமன்றில் எதிர்வரும்11ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரி திருத்த சட்டமூலத்திற்கு…

Read More

வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Read More

புகையிலை உற்பத்திக்கான 90 சதவீத வரி உயர்வு!

புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சிகரமற்றதாக அமைக்கவும்,புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இலவசமாக இரத்த பரிதோதனைகளை செய்து கொள்ளவும் யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஔடத மருந்து விலை அறிக்கை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தரமான மருந்துகளை கொள்வனவு செய்யவும், மருந்து…

Read More

இறை­வரித் திணைக்­க­ளத்தில் கடந்த காலத்தில் பாரி­ய­மோ­ச­டி­கள்

வரி அற­வீ­டுகள் தொடர்பில் இறை­வரித் திணைக்­க­ளத்தில் பாரிய மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பில் முழு­மை­யான விசா­ர­ணை நடத்­தப்­பட வேண்­டு­மென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில்; கடந்த காலங்­களில் பல நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைகள் இந்த சபையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர்…

Read More

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும்…

Read More

வட் வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில்…

Read More

பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More