Headlines

மாணவர்கள் மீதான தாக்குதல் : பாராளுமன்றில் சர்ச்சை

கொழும்பு வோட் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தற்போது பாராளுமன்றில் விவாதம் நடைபெறுவதாகவும் இதனால் சர்ச்சை நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கொழும்பில் இன்று பாரிய மாணவர் போராட்டம்!

கொழும்பில் இன்று பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரில் நடத்திய போராட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களும்…

Read More

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து  இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால்  கண்டன பேரணி நடத்தப்பட்டது. திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த  குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர். பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

ரணிலிடம் அறிக்கை கையளிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Read More

ருஹுன பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

ருஹுன பல்கலைக்கழகத்தின் சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்றுமுதல் சத்தியாக்கிரகத்தில் குதித்துள்ளனர். மாணவர்களின் பரீட்சைக்கான உரிமையை உறுதி செய்யுமாறும், பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை கைவிட கோரியும் இணை சுகாதார கற்கைகளுக்கான மாணவர்கள் நேற்று காலி, கராப்பிட்டிய மருத்துவபீடத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்பாட்டத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்த மாணவர்கள், மருத்துவபீடத்தின் முன்பாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர். ருஹுணைப் பல்கலைக்கழக…

Read More