முஸ்லிம்களுக்கு ஒரு அங்கல இடமும் கிடையாது – சிங்கள ராவய
கூரகலயில் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம் பௌத்தர்களின் புனிதபூமியாகும். இது எமது பூர்வீக தொல்பொருள் பிரதேசமாகும். நாட்டிலுள்ள தொல்பொருள் சட்டத்தைப் பயன்படுத்தி கூரகலயில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கூரகல விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘கூரகலயில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்கிவருகிறது. அப்பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. முஸ்லிம்களின்…
