ஜாகிர் நாயக் விவகாரம் – மோடிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது…
