பொதுபல சேனா ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்
அரசாங்கம் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்தும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றினைக் கையளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சமய ரீதியிலான வங்கி முறையொன்றினை அரசு…
