Headlines

வித்தியா படுகொலை : சுவிஸ்குமார் தொடர்பில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 9ஆவது சந்தேக நபர் சுவிஸ் குமார்  கைது செய்யப்பட்ட பின்னர் எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தெடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு ஊர்காவற்றுறை நீதவான் எம். எம் .றியால் உத்தரவிட்டார். குறித்த வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போது 9 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது இவ்வழக்கு தொடர்பாக 9ஆவது சந்தேக நபராக…

Read More

பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு; நீதிபதி அறிவுரை

‘உங்கள் இருவரின் நடவடிக்கைகளும் பெற்றோர் ஒருவருக்குரிய நடவடிக்கைகளாக நான் காணவில்லை.  உங்களின் பராமுகம் குற்றவாளிக்கு அத்தகைய குற்றத்தை செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு. நடந்த இந்த கொடூரத்துக்கு நீங்களும் பதில் சொல்ல வேண்டும்.’ என நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பா ஜானகீ ராஜரத்ன கொலைச் எய்யப்பட்ட சேயாவின் பெற்றோரை நோக்கி தெரிவித்தார். அத்துடன் முழு பெற்றோர் சமூகத்தையும் விழித்த அவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விஷேட அறிவுரையினையும்…

Read More

சிறுமி சேயா கொலை வழக்கு மீதான இறுதி தீர்ப்பு இந்த மாதம்

கொட்டதெனியாய பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கின் இறுதித் தீர்ப்பு இம்மாதம் 15ஆம் திகதி வழங்கப்படும் என, நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முன்னதாக 17 வயது மாணவன் ஒருவர், கொண்டையா என கூறப்பட்ட துனேஷ் பிரியஷாந்த உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனை அறிக்கையின் படி,…

Read More

மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது  செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  உறுதிப்படுத்தினார். கைது  செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read More

சேயா வழக்கு: 25 முதல் தொடர் விசாரணை

கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில் ஐந்துவயது சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய படுகொலை தொடர்பான வழக்கை ஜனவரி 25ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஷம்பா ஜனாகி ராஜரத்ன உத்தரவிட்டார். இந்த வழக்கு, சமத் ஜயலனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

Read More

கொண்டையாவுக்கு ஐந்து கோடி ரூபா நட்டஈடு வேண்டுமாம்!

ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த நஷ் ஈடு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே கோரப்பட்டுள்ளது. மினுவன்கொட கொட்டாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சேயா செவ்தம்னி என்ற ஐந்து வயது சிறுமி கொலையுடன் எவ்வித தொடர்பையும் பேணாத தம்மை சில நாட்கள் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப்…

Read More

வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மனு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் எஸ். லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்றைய தினமும் மரபணு சோதனை அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்….

Read More

சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை   எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

1 கோடி ரூபா கோரும் கொட்டதெனியாவ மாணவன்

கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவன் சுரஞ்சன் பிரதீப் செனவிரட்ன, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று (04) தாக்கல் செய்து குறித்த மனுவில், பொலிஸார், தன்மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தன்னை கைது செய்து, கொடுமைப்படுத்தியதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூபா ஒரு கோடியினை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியுள்ளார். குறித்த மனு, வழக்கறிஞர் தீஷ்ய வேரகொடவின் ஊடாக உச்சநீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மனுவின் பிரதிவாதிகளாக, கொட்டதெனியாவ…

Read More

சேயா கொலை தொடர்பான வழக்கினை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை

கொட்டாதெனியாவ நான்கரை வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் மஜிஸ்திரேட் நீதிமன்றிடம் கோரியுள்ளனர். சேயா கொலை தொடர்பான வழக்கு நேற்று மினுவன்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர். இந்த வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண அறிவித்துள்ளார். சேயா கொலை தொடர்பிலான முழு விசாரணைகளையும்…

Read More

சேயா செதவ்மி படுகொலை : சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More