Headlines

நிறைவேற்று அதிகாரங்களை மைத்திரிபால குறைப்பார்: அமெரிக்கா நம்பிக்கை

இலங்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கைகளை சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சமந்தா பவார் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அதிகாரக் குறைப்புக்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் பவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சோதனைகளில் இருந்து மீண்டு சமநிலையை பேண ஜனாதிபதி மைத்திரிபால விரும்புவதாகவும் பவர் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா இலங்கை விவ­கா­ரத்தில் அதீத அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் நிரந்­த­ர­ வ­தி­வி­டப்­ பி­ர­தி­நிதி சமந்தா பவர், இலங்­கையில் தற்­போ­து­வ­ரையில் நல்­லி­ணக்கம் முழு­மை­யாக கட்­டி­யெ­ழுப்­­ப­ப்பட­வில்­லை­யெ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடு­க­ளுக்­கான நிரந்­த­ர வதி­வி­டப்­பி­ர­திநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்­தி­யோக பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ள நிலையில் அவ­ரது விஜ­யத்தின் இறுதி தின­மான நேற்று இலங்­கையின் எதிர்­கா­லத்தின் தூண்­க­ளாக காணப்­படும் இளைஞ சமு­தா­யத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்டார். கொழும்பில் ஒரு­மணி நேர­மாக இடம்­பெற்ற…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள்: சமந்தாவிடம் கையளித்தார் றிஷாத்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடமே றிஷாத் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோள் பத்திரத்தை கையளித்தார். உள்ளக விசாரணை என்பது ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு அமைவானது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் விசாரணைக்காலமானது 2001 லிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More