Headlines

மாலி நாட்டை பாதுகாக்க தயாராகும் இலங்கை இராணுவத்தினர்

இலங்கை இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் அமைதி பணிகளுக்காக விரைவில் மாலிக்கு அனுப்பப்படவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார் இந்தநிலையில் இலங்கை படையினருக்கு நவீன ரக ஆயுத பயிற்சிகளை வழங்க வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் விடுத்த வேண்டுகோளை, ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு பாதுகாப்பு அமைச்சர் மட்டக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. லண்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்தக்கோரிக்கையும் இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இது இலங்கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியதாகவும், அதனால் அவர்களுக்கு புற்றுநோய் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு அவர்கள் உயிரிழப்பதாகவும் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தெல்கொட ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மெற்கொண்டு அதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. இந்நிலையில்  சில அரசியல்வாதிகள் மக்களிடத்தில் போலியான…

Read More

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டில் ஏற்படும் சிறிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் சாலாவை முகாம் வெடிப்பை மையப்படுத்தி அரசியல் லாபம் தேட பலர் முனைவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு இடர் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் 8000 டொன் ஆயுதங்கள் அழிவடைந்துள்ளதோடு, 75 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அதில் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்…

Read More

இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்ப நடவடிக்கை!

இரசாயன பகுப்பாய்வாளர்களை கொஸ்கமைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இன்று தெரிவித்தார். குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், முதலில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறினார். மேலும் இது தொடர்பாக பொலிஸார் மற்றும் முப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர். குறித்த பகுதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் பணியானது இரவு 8 மணியளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்று…

Read More

ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!

தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…

Read More

போரில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூர தடையில்லை!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித தடையுமில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு (தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016) தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

Read More