Headlines

25 வருடகால தடை நீங்கியது : காங்கேசன்துறை வீதி பாவனைக்கு!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயத்திற்கு உட்பட்டு காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசன்துறை புகையிரத நிலைய வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் இதுவரை காலமும் காணப்பட்ட இராணுவத்தினரின் வீதித் தடைகள் முற்றாக அகற்றப்பட்டு, மக்கள் போக்குவரத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிமுதல் குறித்த வீதியில் பேரூந்துகள் தமது சேவையை ஆரம்பித்துள்ளன. இதுவரை காலமும் மாவிட்டபுரத்திலிருந்தே பேரூந்துகள் சேவையில்…

Read More

 அத்துருகிரிய நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த வாயிலில் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயில், கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More