க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்
எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சைக்கு ஆறு இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். இவர்களுள் நான்கு இலட்சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் இரண்டு இலட்சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். இம்முறை 4,670 பரீட்சை மத்திய நிலையங்களை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு கடந்த வருடம்…
