பொத்துவில்லுக்கு தனியான கல்வி வலயம்; றிஷாத்தின் கோரிக்கையை ஏற்பு!
சுஐப் எம்.காசிம் பொத்துவில்லுக்கு என தனியான கல்விவலயத்தை அமைத்துத் தருமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம், அமைச்சர் றிசாத் விடுத்த வேண்டுகோளை ஏற்றுகொண்ட அமைச்சர், அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கொழும்பு, பத்தரமுல்லையில் இன்று மாலை (18/08/2016) இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது. கல்வி அமைச்சருடனான இந்தச் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும், கஹடகஹ கிரபைட் நிறுவனத்தின் தலைவருமான முன்னாள் எம்.பி. மஜீத் (எஸ்.எஸ்.பி), சட்டத்தரணி முனாஸ்தீன், உதவிக்கல்விப் பணிப்பாளர்…
