Headlines

சுங்க சட்டத் தயாரிப்பு: பொது மக்களும் யோசனைகளை முன்வைக்கலாம்

150 வருடங்கள் பழமையான சுங்க கட்டளைச் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளவது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க பொது மக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத் தயாரிப்புக்காக செயற்குழு, தொழிநுட்பக் குழு மற்றும் சட்டமூலக் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தங்களின் யோசனை முன்வைக்க  ஜூலை மாதம் 11ஆம் திகதி வரை காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்கு முன்னர் தங்களின் யோசனையை நிதி அமைச்சிடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இது…

Read More

தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்களை தொடர வேண்டாம்

துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கை குற்றம் புரிந்தவரை பாதுகாக்கும் செயல் என துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் மஞ்சுல குணசேகர  தெரிவித்தார்.

Read More

இலங்கையில் முதன் முறையாக சோலாஸ் செயற்திட்டம்!

இலங்கையில் முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டல்களின் கீழ் கப்பற்துறையுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமென வணிக கப்பற் சேவைகள் செயலகத்தின் அத்தியட்சக ஜெனரால் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Read More