Headlines

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்!

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை, நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (21/10/2016) தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம் எழுதிய “இது ஒரு தருணம்“ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, ஒலுவில் கடலரிப்பினால் இந்தப் பிரதேச…

Read More

ஒலுவில் கடலரிப்பு – அமைச்சரவையில் என்ன நடந்தது என்ன?

-ஒலுவில் கமால் அஹ்மட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த  அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார் அதன் பயனாக…

Read More

ஒலுவில் கடலரிப்புக்குத் தீர்வுபெற அர்ஜுன தலைமையில் அமைச்சரவை உபகுழு

ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016) இடம்பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்தக் குழுவில், மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

Read More

கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் றிசாத் பதியுதீன் பலமுறை தன்னை சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும், இந்தக் கடலரிப்புப் பிரதேசத்துக்கு தற்காலிக பாதுகாப்புச் சுவர் ஒன்றை அவசரமாக அமைக்கும் நோக்கிலேயே…

Read More

ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்

-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…

Read More

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…

Read More

ஒலுவில் படகுத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள நவீனரகப்  படகுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர்  றிசாத் பதியுதீன், அங்கு படகுக் கட்டுமானப்பணிகள்  இடம்பெறும் இடங்களைப் பார்வையிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய, நவீனரக யொட் (Yacht Boat) படகுகள் இங்கு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு தனிநபர் பிரேரணை

“ஒலுவில் துறைமுக பாதிப்பு, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். எதிர்வரும் மே மாதம் அளவில் இந்தப் பிரேரணை விவாதத்திற்கு வரும்போது, இங்கு வாழ்மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை நீக்க முடியும் என்று, நான் பெரிதும் நம்புகின்றேன்” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒலுவில் மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல், அன்சாரி ஜும்மா பள்ளிவாசல் ஆகியவற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்த…

Read More

பொங்கியெழுந்த தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் (படங்கள்)

வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று(04) பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது வட புல முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்திய வாசகங்கள் பொதிந்த பதாதைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலுவில் வளாகத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கவனயீர்ப்பு…

Read More