Headlines

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது

– சுஐப் எம் காசிம் – யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. ஆளை ஆள் விமர்சித்துக் கொண்டு ஒருவரை மற்றவர் குறை கூறிக்கொண்டிருந்தால் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிரமமாகவே இருக்குமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் தமது பிரதேசத்திற்கு மீள் குடியேறச் சென்றுள்ள யாழ் முஸ்லிம்களுடனான கலந்துரையாடல் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.  இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற…

Read More

எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று மாலை தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைவை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய…

Read More

மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு றிஷாத்தின் நேரடிப் பங்குபற்றலுடன் தீர்வு

நீண்ட காலமாக இழுபரிக்குள்ளான நிலையில் இருந்த யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டிருந்த, முட்டுக்கட்டையான பிரச்சினைகள் பலவற்றுக்கு யாழ் கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாத்தின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடிப் பங்கேற்புடன், யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற  நடவடிக்கைகளுக்கான அமைச்சர் றிஷாத்தின் பிரதிநிதி மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம்,…

Read More

றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன்

– சுஐப் எம்.காசிம் – அமைச்சர் றிஷாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நேற்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா கல்லூரியில், மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அங்கஜன் எம்.பி இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான், ஜனாப் ஜமால், அல்ஹாஜ் முபீன் ஆகியோர் உட்பட உரையாற்றினர். அங்கஜன் எம்.பி கூறியதாவது,…

Read More

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம் காசிம் – சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் தென்னிலங்கையில் அகதி வாழ்வுக்கு முகம் கொடுத்து தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ள அகதி முஸ்லிம் மக்களின் பூர்வீகக் கிராமங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (22) விஜயம் செய்தார். மன்னார் முசலி – சிலாவத்துறை பிரதேசங்களிலுள்ள அகத்திமுறிப்பு, அளக்கட்டு, பீ பீ பொற்கேணி, எஸ் பீ பொற்கேணி, வேப்பங்குளம், மறிச்சுக்கட்டி ஆகிய கிராமங்களுக்கும் சிங்கள மக்கள்…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியிலேயே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்கும்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ் – முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசத்தின் ஆள்காட்டிவெள பூமலர்ந்தான் காக்கையங்குளம் ஹபீப் நகர் அல் மதீனா மணல்மூட்டை டி வர்ணபுர பாலைப்பெருமாள்கட்டு புளியங்குளம் ஆகிய கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களையும்இ மக்கள் நல்வாழ்வுப் பணிகளையும் அமைச்சர் றிசாத் இங்கு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். அவர் அங்கு இடம்பெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் இதன்போது கூறியதாவது அரசியல்…

Read More

சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள்! முஸ்லிம் அமைப்பு ஆர்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி வடக்கு முஸ்லிம் அமைப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

Read More

முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட வேண்டும் – சுஷ்மாவிடம் றிஷாத் வலியுறுத்து

பல தசாப்த கால­மாக இலங்­கையில் புரை­யோடிப் போயுள்ள இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கி­றது. அதனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வில் முஸ்லிம் மக்­களின் அபி­லா­சை­களும் உள்­வாங்­கப்­பட வேண்டும். இதனை இந்­தியா உறுதி செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத் தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான றிஷாத் பதி­யுதீன் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜிடம் வேண்­டுகோள் விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் கடந்த சனிக்­கி­ழமை இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மாவை…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் உருக்கம்

– ஊடகப்பிரிவு – தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (25) காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஷாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்றபோது அமைச்சர் றிஷாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன்போது அமைச்சர்…

Read More

ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்

இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப்  பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக்  காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…

Read More

அமைச்சர் றிஷாதோ, முஸ்லிம்களோ காட்டை அழிக்கவில்லை – ராஜித

-அஷ்ரப் ஏ சமத்- வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு நேற்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட  கேள்வி –  அமைச்சா் றிஷாத் பதியுதீனால்  வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா்    அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ? அமைச்சா் டொக்டா் ராஜித்த  பதில் – அவ்வாறு அந்த…

Read More