Headlines

500 கோடி ரூபாய் செலவில் பஸ் கொள்வனவு

இலங்கைப் போக்குவரத்து சபைக்காக இந்திய நிறுவனம் ஒன்றிலிருந்து 500 பஸ்கள் கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டின் ஊடாக குறித்த பஸ்களை சிறிது சிறிதாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் எனினும் அது இதுவரை சாத்தியப்படாததால் அமைச்சர் குறித்த பஸ்களை ஒரே சந்தர்ப்பத்தில் கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்களது ஈ.பீ.எப் மற்றும்…

Read More

மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Read More

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி

மாத்தறை – கதிர்காமம் புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் பயணிகளுக்கான சிறந்த போக்குவரத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த புகையிரத பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் இந்த புகையிர போக்குவரத்து அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த புகையிர போக்குவரத்து மாத்தறையில் இருந்து…

Read More

பஸ் கட்டணம் அதிகரிக்க கால அவகாசம்!

பஸ் கட்டணத்தை திருத்துமாறு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பாக தனியார் பஸ்உரிமையாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் போது தீர்வு எட்டப்படவில்லை என அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். எனினும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஒரு…

Read More

மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்- நிமால் ஸ்ரீபால

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் இ-மோட்டர் சேவை

உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவை ஒதுக்க மாட்டோம் – அமைச்சர் நிமல்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு அமை­வாக செயற்­ப­டு­கின்றார். அதற்­காக அவரை ஒதுக்கிச் செயற்­படும் நிலைப்­பாட்டில் சுதந்­திரக் கட்­சியும் இல்லை. எனவே பேச்­சு­வார்த்தை ஊடாக அவ­ரது பிரச்­சி­னையை அணுகி அதற்­கான தீர்­வொன்றை எட்­டவே நாம் முயற்­சிக்­கின்றோம் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­க­ண­ட­வாறு தெரி­வித்தார்.

Read More

ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம்!

பயண நுழைவுச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ரயிலில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு 20,000 ரூபா அபராதம் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது 5000 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 20,000 ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நாள் தோறும் டிக்கட் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்து…

Read More

அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்: நிமல்

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று ( நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாது இருக்க வேண்டுமாயின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

மோசடி செய்யும் ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை.!

இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபைக்குச் சொந்­த­மான பணத்­தினை மோசடி செய்யும் ஊழி­யர்கள் மற்றும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். அநு­ரா­த­புரம் சி.டி.சி. வர­வேற்பு மண்­ட­பத்தில் போக்­கு­வ­ரத்துச் சபை ஊழி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

Read More

ஆட்டோ சாரதிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

முச்சக்கரவண்டிகளுக்கு பாதுகாப்பு ஆசனப் பட்டியை அறிமுகப்படுத்தல், தலைக்கவசங்களுக்​கென புதிய தரம் அறிமுகப்படுத்தல் உட்பட வீதி ஒழுங்கு விதிகள் தொடர்பில் புதிய பரிந்துரைகள் வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால், போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் கருத்துக்களுக்கமைய வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் தயாரிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பின்பற்றப்படும் 50 கிலோ மீட்டர் வேக…

Read More

தேசிய அரசாங்கம்: மஹிந்தவின் யோசனை

தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையே என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஹங்கமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தேசிய அரசாங்கம் என்றொரு கருப்பொருளை ஒரு சிறந்த மனிதரே அறிமுகப்படுத்தினார். அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு முன்னரே இந்தக் கருப்பொருளை அறிமுகப்படுத்தி விட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More