Headlines

அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்வாதிகளே தேவை – பா.உ. நவவி

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் சொகுசாக இல்லாமல் மக்கள் பிரச்சினைகளை கேட்டு தீர்க்கும் அரசியல்வாதிகளே இன்றைய தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி தெரிவித்துள்ளார்.

Read More

கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை செய்கிறது – நவவி

புத்தளம் தொகுதியில் காணப்பட்ட 2200 ஆசிரியர் வெற்றிடங்களில் 1200 வெற்றிடங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக நிரப்பட்டுள்ளன. கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை நல்கி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார். புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் புதன்கிழமை (19) காலை நடைபெற்ற 2015 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிக ஏ (A) சித்திகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

புத்தளத்திலுள்ள 08 பாடசாலைகளுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – நவவி

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார். “புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும்…

Read More

பாடசாலை வகுப்பறை நிர்மாணப்பணிக்காக நிதி ஒதுக்கீடு

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை…

Read More

தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், இன்று (20) கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் மொழிப்பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் இஸட்.ஏ.சன்ஹீர், ஆரம்ப பிரிவு பாட இணைப்பாளர் வீ.அருனாகரன், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம்.தாஹிர், எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பீ.எம்.ஜனாப் , முன்னாள்…

Read More

புத்தளத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான வருடாந்த கலைவிழா

புத்தளத்திலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான வருடாந்த கலைவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (18), புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளத்தில் இயங்கிவரும் விஷேட தேவையுள்ள குழந்தைகளின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி மையம், புத்தளம் பிரதேச செயலகம், நகரசபை மற்றும் புத்தளம் பிரதேசத்திக்குட்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிணைவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘எனக்கு ஆட ஆசை’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களும், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி,புத்தளம் பிரதேச…

Read More

இலவச சீருடை வழங்கும் வைபவம்

விவசாய வாரம் முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.10.2016) புத்தளம் கமநல சேவை நிலையத்தில் நடைபெற்ற சமய நிகழ்வினை தொடர்ந்து நடை பெற்ற  பாடசாலை வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள்.

Read More

புனர்நிர்மாணம் செய்யப்படும் மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி பாதை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆண்டங்கனி ஏதாளை பிரதேசத்தில் உள்ள மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி இல் உள்ள 300m பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேளை திட்டம் நடத்தபட்டுள்ளது அவ்வேளை திட்டத்தை பார்வையிடும் போது..

Read More

புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD),  புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்  என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். கணிதத்துறை அதிமுக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அது தொடர்பாக, நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது….

Read More

வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்

புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. புத்தளம், வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு 1950ம் ஆண்டிலிருந்து வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள் தனியார் நிறுவனங்களின் மூலமாக மட்டும்மே தபால் சேவைகளை பெற்றுவருங்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More