Headlines

பதவி விலகிய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை!– திலக் மாரப்பன

பதவி விலகிய போதிலும் அவன்ட் கார்ட் பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சட்டவிரோதமானது எனக் கூறப்படும் ஆயுதங்களை கடற்படையினரிடம் ஒப்படைக்க முடியுமா என்ற சர்ச்சைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அவன்ட் கார்ட் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதன் ஊடாக நான் பதவியிழந்தது மட்டுமே நடைபெற்றுள்ளது. அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட…

Read More

திலக் மாரப்பனவின் பதவி விலகல் மிகச்சிறந்த முன்னுதாரணம்: மங்கள சமரவீர

முன்னாள் அமைச்சர் திலக் மாரப்பனவின் பதவி விலகல் அரசியலில் மிகச்சிறந்த முன்னுதாரணம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, அவண்ட் கார்ட் விவகாரத்தில் அரசாங்கம் கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ள இருந்தது. அக்கட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாரப்பனவின் ராஜினாமா அரசாங்கம் மீது அழுந்திக் கொண்டிருந்த நெருக்கடியைத்தணிக்க உதவியது. அந்த வகையில் அவரது செயற்பாடு பாராட்டத்தக்க ஒரு முன்மாதிரியாகும். நாட்டுக்கு நல்லதோர் முன்மாதிரியை வழங்குவதற்கு…

Read More

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் பதவி பிரமாணம்

சிறைச்சாலைகள் அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாணம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சராக கடமையாற்றிய திலக் மாரபன்ன நேற்று முன்தினம் பதவி விலகிய நிலையிலேயே, இந்த அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

Read More

ராஜினாமா செய்த காரணங்களை கூறுகிறார் திலக் மாரப்பன

ஊடகங்கள் வாயிலாக தனக்கு தொடர்ந்து சேறு பூசுவதாகவும், தன்மீது சேறு பூசிக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்பதனால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் முன்னாள் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். எவன் கார்ட் நிறுவனத்தின் சர்ச்சைக்குறிய ஆயுதக் கப்பலில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 தடவையாவது ஆயுதங்கள் பரிமாறப்படுவதாக அவர் தெரிவித்தார். கடற்படையினர் மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தினர், குறித்த ஆயுதக் கப்பலில் இருந்து இவ்வாறு ஆயுதங்களை கொண்டு…

Read More

அமைச்சர் திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை ராஜினாமா BREAKINGNEWS

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Read More