Headlines

இலங்கை வருகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேண்டுகோள் விடுத்து வந்தார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியத்தின் முடிவை செயல்படுத்தாதது குறித்து மத்திய அரசு வக்கீலிடமும்…

Read More

மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார். குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது…

Read More

காஷ்மீர் பிரச்சினையை மோடி கண்டுகொள்ளவில்லை: உமர் அப்துல்லாஹ்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டர் வலைதளத்தில் எழுதியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து நிலமை மோசமாகி வருகிறது. ஆனால் அங்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அவர்களாக கற்பனை செய்து கொண்டு இப்படி கூறுகிறார்கள். இங்கு என்ன நடந்து கொண்டு இருப்பதை, பாரதீய ஜனதாவும், இங்கு அவர்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் உணர்ந்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு மட்டும்தான் இங்கு அமைதி நிலவுகிறது…

Read More

இலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: மோடி

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு மோடி…

Read More

எனக்கு பயம் இல்லை – ஜாகீர் நாயக்

இந்திய மதவாத ஊடகங்களினால்  தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக அபாண்டத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவூதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய மீடியாக்கள்தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே, மதவாத ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை. நான்…

Read More

2 போர்க் கப்பல்களில் வரும், இந்தியாவின் உதவிகள்

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் ஆகியவற்றில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கடற்படைக் கப்பல் ஏற்கனவே கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஐஎன்எஸ் சுகன்யாவில்…

Read More

இலங்கைக்கு அவசர உதவிகளை அனுப்ப மோடி உத்தரவு

இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காகஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்குஅனுப்பி வைக்கவும்; அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

Read More

மோடியை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்த வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார். இந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர்….

Read More

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த மகாகும்பா விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மோடிக்கு தைரியம் இல்லை! – அரவிந்த் கெஜ்­ரிவால்

ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் காங்­கிரஸ் தலைவர் சோனியா காந்­தியை கைது செய்யும் தைரியம் பிர­தமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்­ரிவால் தெரி­வித்­துள்ளார். ஹெலி­கொப்டர் ஊழலை முன்­வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகு­தியில் சோனியா காந்­திக்கு எதி­ராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடை­பெற்­றது. இந்த போராட்­டத்தில் பங்­கேற்று கெஜ்­ரிவால் பேசி­ய­தா­வது: ஹெலி­கொப்டர் ஊழல் விவ­கா­ரத்தில் தொடர்­பு­டைய காங்­கிரஸ் கட்­சி­யி­னரை காப்­பாற்ற பா.ஜ.க. அரசு முயற்­சிக்­கி­றது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவ­காரம்…

Read More

ஜனாதிபதி – இந்தியப் பிரதமர் சந்திப்பு இவ்வார இறுதியில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வார இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார். இவ்வார இறுதியில் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அப்பயணத்தின் போதே இந்தியப் பிரதமரை சந்திக்கவுள்ளார். பிரிட்டன் அரசினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலண்டனில் நடைபெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி லண்டன் பயணமாகவுள்ளார். லண்டன் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாட்டுக்கு திரும்பும் வழியில் எதிர்வரும் 13 ஆம்…

Read More