Headlines

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை?

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே. நாராயணன்  தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் குறித்து இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு செருப்படி (காணொளி)

இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்….

Read More