Headlines

‘மஹிந்த, சர்வதேசத்துக்கு பொய் சொல்கின்றார்’

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் பொய் பிரசாரம் செய்தது போதாதென்று இப்போது சர்வதேச ரீதியில் பொய் கூறுகின்றார் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘மத்தல சர்வதேச விமான நிலையம் இன்னும் நெற்களஞ்சியசாலையாக பயன்படுத்தப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, ஜப்பானுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்த நெல், கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அகற்றப்பட்டு விட்டன’…

Read More

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

மத்தல விமானநிலையத்தில் ஒருவர் கைது

– K.Kapila – இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கோடியே 60 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

விமானமொன்று மத்தளையில் தரையிறக்கம்

குவைத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.230 ரக விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடும் மூடுபனி காரணமாகவே குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More