தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தை இன்னும் வைத்திருப்பதில் அர்த்தம் கிடையாது. குறித்த தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின்…
