Headlines

மலையக ரயில் சேவை பாதிப்பு

பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலையகத்தில் கடும் மழை

– க.கிஷாந்தன் – மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும்…

Read More