Headlines

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது – அமைச்சர் கிரியெல்ல

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மூடப்படாது, மூடவும் முடியாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மாணவர்கள் பல்கலைக்கழகமொன்றுக்கு செல்வது கல்வி கற்பதற்காக. ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பல்கலைக்கழகத்திற்குள் சங்கங்கள் கிடையாது. எனினும் நாடாளுமன்றிற்குள் பிரவேசிக்க முடியாத தரப்பினர் பல்கலைக்கழகங்களில் சங்கங்களை அமைத்துக்கொண்டுள்ளனர். ஒர் அரசியல் கட்சி குருணாகலில் நடைபெற்ற போராட்டத்திற்கு 50 பஸ்களை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது, இனி…

Read More

மாலபே கல்லூரி விவகாரம் குறித்த போராட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை – கெமுனு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாலபே தனியார் பல்கலைக்கழக பெற்றோர் அமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மாலபே தனியார் மருத்துவமனைக்கு எதிராக 6 மருத்துவ பீட மாணவர்கள் சத்தியாகிரக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் குறித்த மாணவர்களின் பெற்றோர்களும் சத்தியா கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Read More

மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின்…

Read More

அரசாங்க மருத்துவப்பரீட்சை எழுதுவதற்கு தயார்!

தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாலபே மருத்துவக்கல்லூரியில் பயின்று வெளியேறியுள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மாணவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற தவறும் 82 வீதமான மாணவர்கள், அவர்களின் மருத்துவர்களாக வரும் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என தமது தனியார் கல்லூரியை எதிர்ப்போரிடம் மாணவர் தலைவர் தரிந்து ருவன்பதிரங்கே கேள்வி…

Read More

இதுவரை காலமும் எந்த அரசும் ஒதுக்காத நிதி கல்விக்கு

இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்  தெரிவித்தார். கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

Read More