மஹியங்கனையில் நிலைமை சுமுகம்
மஹியங்கனை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த இரு தரப்புகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்காலத்தில் பிரச்சினைகள் எதுவுமின்றி சமாதானமாக வாழ்வதாக இருதரப்பினரும் உறுதியளித்தனர். மஹியங்கனை நகரிலுள்ள பன்சலையில் கடந்த நோன்மதி தினத்தன்று பெளத்த தேரர் ஒருவர் நிகழ்த்திய மார்க்க பிரசங்கத்தில் முஸ்லிம்களைப் பற்றி தவறாக தெரிவிக்கப்பட்டமையையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் இளைஞர்கள் பெளத்த கொடிகளை எரித்ததாலேயே இந்த முறுகல் நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் எட்டு இளைஞர்கள் 14 நாட்கள்…
