Headlines

பம்பலப்பிட்டி மாணவி கடத்தல், விடுவிக்க 75 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்படுகிறது

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் (25) பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும்,…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகரை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் 5 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்த்தகரின் தந்தை – 0770101971 முன்னைய செய்தி: கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More