Headlines

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

களனி கங்கைக்கு அண்மையில் 400 சட்டவிரோத கட்டுமானங்கள்

களனி கங்கையின் தெற்கு ஆற்றுநீர் கட்டுமான பகுதியை அண்மித்த பகுதிகளில் 400 சட்டவிரோத கட்டுமானங்கள் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். நீர்பாசன திணைக்களத்தினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே குறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Read More

இயல்புநிலைக்குத் திரும்பிய ஆறுகளின் நீர்மட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது. இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள்…

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகின்றது

சீரற்ற காலநிலை காரணமாக  அதிகரித்திருந்த  களனி கங்கையின் நீர் மட்டமானது, தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகலகம்வதிய மாபாங்கய பகுதியில் 7.5 அடிக்கு இருந்த நீர்மட்டமானது தற்போது 5.6 ஆக குறைவடைந்துள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களத்தின் செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க தெரிவித்தார். நீர்மட்டமானது 5 அடிக்கு குறைவடையும்போதே வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளநீர் முற்றாக வழிந்தோட ஒருவாரம் எடுக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது

களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், இன்னும் மூன்று நாட்களில் கங்கையின் நீர்மட்டம் சாதாரண நிலைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளம் வடிவதற்கு சில நாட்களாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

களனி பிரதேசத்தில் இன்று விமானப்படை மீட்புப் பணிகள்!

களனி ஆற்றின் வெள்ளம் காரணமாக வீடுகளில் சிக்கிக் கொண்டுள்ள பொதுமக்களை மீட்கும் பணிகளில் இன்று விமானப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மல்வானை, களனி, கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் இந்த மீட்புப் பணிகள் இன்று முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்காக விமானப்படையினரின் இரண்டு ஹெலிகொப்டர்களில் மீட்புக்குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். களனி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அதிகரித்த நீர் மட்டம் காரணமாக தங்கள் வீடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்….

Read More

வெள்ளப்பெருக்கில் மூழ்கிப்போன இராணுவ முகாம்!

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக களனி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் இராணுவ முகாம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. களனியாற்றுப்படுகையில் அமைந்துள்ள களுஅக்கல பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாம் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் ஆறு அடி உயரம் வரை வெள்ள நீர் புகுந்துள்ளதாக முகாமின் கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக இராணுவ முகாமுக்கு வழங்கப்பட்ட மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ட்ரான்ஸ்போமரை மின்சார சபை அதிகாரிகள் அகற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக…

Read More