Headlines

வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வேலையற்றோர் வீதம் 4.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளி விபரவியல் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவைத் துறையில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும். முதல் காலாண்டு இறுதியில் நாட்டின் பணிகளில் ஈடுபட்டு வருவோரின் மொத்த எண்ணிக்கை 7,969,000 ஆகும். இந்தக் காலப் பகுதியில் சேவைத் துறையில் புதிதாக 155,638 பேர் பணிகளில் இணைந்து கொண்டுள்ளதுடன், கைத்தொழில் துறையில் 72,273 பேர்பணிகளில் இணைந்து கொண்டுள்ளனர். முதல்…

Read More

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறு கோரி பதுளை, அம்பாறை உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read More

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.  இப்பயிற்சி நெறிகளைப் பயில விரும்புவோர், தமது விண்ணப்பங்களை ‘பொறுப்பதிகாரி, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், வலந்தலைச் சந்தி, காரைநகர்’…

Read More

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரிக்கை

மேல் மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைகள் இடம்பெற்று இரண்டு வருடங்களாகின்ற போதும், அவர்களுக்கு நியமனம் வழங்க, நிதி அமைச்சின் முகாமைத்துவ திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என, குறித்த சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த நியமனங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என, நிதி அமைச்சுக்கு வலியுறுத்தி, மேல் மாகாண…

Read More

அரசதுறை நிறுவனங்களில் வெற்றிடங்கள் பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை

– ஆர்.கிறிஷ்­ணகாந் – பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு…

Read More

இலங்கை பெண்ணை கல்லெறிந்து கொல்ல நீதிமன்றம் உத்தரவு!

விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி  அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்க தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த…

Read More

தனி­யா­ருக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு?

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண. ஊழியர் சேமா­லாப நிதி, நம்­பிக்கை நிதி இரண்­டையும் இணைத்து ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதனை தெரி­வித்தார். கடந்த 100 நாள் ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் அரச…

Read More