Headlines

முன்னாள் பொலிஸ்மா அதிபர் அரசியலமைப்பு சபையின் உபகுழுவிற்கு தெரிவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் அரசியலமைப்புக் குழுவின்உபபிரிவு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் குழுவிற்கு சட்டமா திணைக்களத்தின் பிரதானசொலிஸ்டரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோத்தாகொடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அரசியலமைப்பு சபையில் உபகுழுக்களாக 5 குழுக்கள் இவ்வாறுசெயற்படுவதாகவும், அதன் நியமனங்கள் அனைத்தும் சுயேட்சையானது என்றும் இதில் உள்ளஅதிகாரிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

என் மீதான குற்றச்சாட்டை எதிர்க்கிறேன் – இளங்ககோன்

என் மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என முன்னாள் பொலிஸ்மா அதிபரான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். தான் நீண்டகாலமாக பொலிஸ் சேவையில் கடமையாற்றியுள்ளதாகவும், என்னுடையநற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பலர் பொய் குற்றச்சாட்டுக்களைசுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரக்பி வீரர் தாஜுடீன் கொலை வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவருவதாகவும், முடிந்தால் அதை நிரூபிக்குமாறும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இந்த வழக்கில் எவ்வித சவால்களுக்கும் தான் முகங்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தாஜுடீன் கொலை…

Read More

பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை.!

இலங்கையின் 34 ஆவது பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். என்.கே. இலங்கக்கோன் கடந்த 12 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்றுள்ளதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தரவின் பெயரினை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது.

Read More

34 ஆவது பொலிஸ் மா அதிபர் இன்று நேர்முகப் பரீட்சை

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு புதியவரை நியமிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதியால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களினதும் தகைமைகளை பரீட்சித்துப் பார்க்க அரசியலமைப்புசபை தீர்மானித்துள்ளது. அதன்படிசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான எஸ்.எம்.விக்ரமசிங்க, பூஜித்த ஜயசுந்தர,சந்தன விக்ரமரத்ன ஆகியோர் இன்று (18) பாராளுமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அரசியலமைப்பு சபை பாராளுமன்றில் கூடவுள்ள நிலையில் புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்யும் பணி இடம்பெறவுள்ளது. இந் நிலையிலேயே பதில் பொலிஸ்…

Read More

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக முதன்மை டிஐஜி எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். என்.கே. இலங்­ககோன் நேற்று (11) ஓய்வு பெற்றதை தொடர்ந்தே  பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம் விக்கிரமசிங்க  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை செய்­தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் தெரி­வித்தார். அர­சியல் தலை­யீ­டு­களை நான் தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன். எனினும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட மறுத்தேன். இதனால் பல சவால்­களை எதிர்­கொள்ள நேர்ந்­தது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார். கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­ன­ரான…

Read More

இன்று ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இன்றுடன் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கின்றார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் கடமையாற்றி வந்தார். 1980ஆம் ஆண்டு புதிய துணை பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இளங்கக்கோன் 1982ஆம் ஆண்டில் திறமை அடிப்படையில் துணை பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தார். நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ள என்.கே. இளங்கக்கோன் பல பொலிஸ் பிரிவுகளின் பணிப்பாளராகவும்…

Read More

தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை!

தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளதாகவும் இதனால், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அச்சமோ சந்தேகமோ கொள்ள தேவையில்லை என ஓய்வுபெறவுள்ள பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (6) ராமஞ்ஞைய பௌத்த பீடத்தின் நாபான பிரேமசிறி நாயக்க தேரரை சந்தித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த 5 வருட காலத்தில் பொலிஸ் சேவையின்…

Read More

பொலிஸ் மா அதிபர் ஓய்வு

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (07) அறிவித்தார். இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி, ‘அண்மையில் உருவாகிய பொலிஸ் மா அதிபர்களுள் அனைவருக்கும் முன்மாதிரியாக தனது பதவியின் கௌரவத்தை பாதுகாத்து பணியாற்றிய ஒரு பொலிஸ் மா அதிபராக என்.கே.இலங்ககோன், வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்’ என்று கூறினார். சுமார் ஐந்தாண்டு காலம் பொலிஸ் மா அதிபராக அளப்பரிய சேவையாற்றியஇலங்ககோனுக்கு, ஜனாதிபதி இதன்போது வாழ்த்து தெரிவித்து, அவரது…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More