இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது: இந்திய தூதர் ஒய்.கே.சின்கா
21-ம் நூற்றாண்டில் இந்தியா-இலங்கை உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கொழும்பில் உள்ள பண்டார நாயக்கா சர்வதேச படிப்பகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- சிறிசேனா பதவியேற்ற பிறகு பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான சுற்றுப் பயணம் இருநாடுகளிடையே நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு…
