Headlines

இன்புலுவன்சா நோய் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் நிலை

நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களுக்கான வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வைத்தியசாலைகளில் இல்லையென தாதியர் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியள்ளது. இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More