Headlines

புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு  வாழ்த்து

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அத்தோடு அவர்களின் பெற்றோர்கள் ,கற்பித்த ஆசிரியர்கள் , அதிபர்களுக்கும் , சித்தியடைய உதவிய அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அப்துல்லாஹ் மகரூப் பா.உ

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு  வாழ்த்துகள்-பிரதியமைச்சர் அமீர் அலி

வெளியான 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், வழிகாட்டிய அதிபர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

Read More

புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத்

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெருபேறுகளைப் பெற்று சித்தியடைந்த, அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் எனது நல்வாழ்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,  பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் உங்களுடைய கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு வேண்டிக்கொள்கிறேன். உங்கள் அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமாக அமைய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். – றிஷாத் பதியுதீன் –

Read More

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2959 பரீட்சை நிலையங்களில் இந்தப்பரீட்சை நடத்தப்படவுள்ளது. இந்தப்பரீட்சையில் 350701 மாணவர்கள் தோற்றுகின்றனர். முற்பகல் 9.30க்கு முதலாம் வினாத்தாள் பரீட்சை ஆரம்பமாகும். 75 நிமிங்களுக்கான இரண்டாம் வினாத்தாள் பரீட்சை முற்பகல் 10.45க்கு ஆரம்பமாகும். இந்தநிலையில் மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்களை, தமது ஆடையின் இடதுபக்கத்தில் பொறித்திருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். பரீட்சை நேரத்தில் மாணவர்களின் பெற்றோர் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதேவேளை, பரீட்சை தொடர்பான ஏதாவது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் நடத்­து­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ளதாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 21 ஆம் திகதி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யிட்டே இத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்பு, கருத்­த­ரங்கு, விரி­வுரை, பயிற்­சிப்­பட்­டறை, மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிட்டு விநி­யோ­கித்தல் மற்றும் பதா­தைகள் ஒட்­டு­வது, துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்­கு­வது, தொலைக்­காட்சி வானொலி விளம்­ப­ரங்கள் ஆகி­ய­வற்­றுக்கு…

Read More

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை

தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நாட்களில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் மாத்திரமின்றி, அதுதொடரபான பதாகைகள்,  துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

Read More

வாழைச்சேனையில் இலவசக் கருத்தரங்கு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 01.08 .2016 திங்கட்கிழமை அன்று பி.ப.02.00 pm தொடக்கம் 07.30pm மணிவரை நடைபெறவுள்ளது. வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் ஆசிரியரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையில் அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் பாணந்துறை அல் பஹ்ரியா மத்திய மகா வித்தியாலய அதிபர் ARM ஜிப்ரி அதிபர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது….

Read More