Headlines

தண்டனையை நெருங்கும் ஞானசார

ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என…

Read More

ஞானசார தேரர், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று (25)  அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை…

Read More

சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு

சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.

Read More

இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்..! பகிரங்கமான இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர். அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,ஜனவரி 31 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உட்பட சிலர் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த உள்ளிட்ட கைதிகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பிச் சென்றனர்.  இவர்களை சந்தித்து பேசி பின்னர், யோஷித்த ராஜபக்ச இரும்பு கதவை திறந்து கொண்டு தான்…

Read More

ஞானசார தேரருக்கு பிணை

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று (10) ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Read More

நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்

ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…

Read More

ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்

நீதி­மன்ற அவ­ம­திப்பு மற்றும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்த குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேல­திக சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரி­வித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் ஜெப்ரி அழ­க­ரட்­னத்தை நேரில் சந்­தித்து தான் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.ஸுஹைர் மேலும்…

Read More

ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)

நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில்  தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More

ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம்

பிக்குகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுக் கடமையை ஞானசார தேரர் நிறைவேற்றியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று (27) காலை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம அத்தததஸ்ஸி மகாநாயக்க தேரரையும் அவர் சந்தித்திருந்தார். இதன் போது கருத்து வெளியிட்டிருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரர், வரலாற்றுக் காலம் தொட்டு நாட்டில் எழுந்த பல்வேறு பிரச்சினைகளின்…

Read More

மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…

Read More

பெளத்தன் என்ற வகையில் வெட்கமாக உள்ளது – ரணில்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மல்வத்தை பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதி ஆகியோருக்கு அறிக்கை…

Read More