Headlines

தென்கொரியா சென்றடைந்தார் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தென் கொரியாவிற்கு இன்று (5) அதிகாலை 1.30 மணியளவில் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தென் கொரியாவிற்கு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவர் தென் கொரியாவில் இடம் பெற உள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காகவும்அங்கு வாழ்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்காகவும் தென் கொரியாவிற்கு விஜயம்மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் ஜ.எல்.பீரிஸ்,மகிந்தானந்த அலுத்கமகே,பந்துல்ல குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்தவுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்பினார் மஹிந்த!

தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச தாய்லாந்திற்கு விஜயம் செய்திருந்தார். தாய்லாந்தில் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களையும் மஹிந்த சந்;தித்திருந்தார். மே தினக் கூட்டத்திற்கான ஆயத்தங்கள் தீவிர முனைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த நாடு திரும்பியுள்ளார். நேற்று நள்ளிரவு (26) அளவில் மஹிந்த நாடு திரும்பியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன….

Read More

மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் மஹிந்த

வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று தாய்லாந்தின் உடம் தானி விஹாரையில் நிர்மாணிக்கப்பட உள்ள கலச கோபுரமொன்றிற்கான புனித தாதுக்களை புதைக்கும் நிகழ்வில் மஹிந்த பங்கேற்றார். மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த புனித தாதுக்கள் தாய்லாந்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று முன்தினம் மஹிந்த தாய்லாந்து விஜயம் செய்திருந்தார். இதேவேளை, லாவோஸ் எல்லைப் பகுதியின் மலை உச்சியில்…

Read More

இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படுவதனை எதிர்க்கின்றோம்: கூட்டு எதிர்க்கட்சி

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது. அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர். இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம். பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த…

Read More

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார். அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

Read More