Headlines

அரச அச்சகர் காமினி பொன்சேகா இராஜினாமா

அரச அச்சுத் திணைக்களத்தின் அச்சகர் காமினி பொன்சேகா தனது பதவியை இன்று (20)  இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதத்தினை  ஊடக அமைச்சின்  செயலாளர் நிமால் பொபகேவிடம் இன்று காலை கையளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அவருக்கு எதிராக  பல தரப்புகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களே இவரது இராஜினாமாவிற்கு காரணமென அரச அச்சுத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Read More