Headlines

வருகிறது ஊடக மத்திய நிலையம்

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேசிய ஊடக மத்திய நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சின் கட்டமைப்பின் கீழும் பிரதமர் செயலகத்துடன் இணைந்தும் இந்த ஊடக மையம் செயற்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை தகவல்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பொறிமுறைகளை செயற்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையையும், துல்லியத்தையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செயற்பாடு மிகவும் அவசியமாகும்….

Read More

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டு தங்களது சொந்த காணிகளை பலர் இழந்துள்ளனர். இதுவரையில் அவர்களுக்கு உரித்தான காணிகளோ அல்லது வேறு ஒரு காணியோ வழங்கப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தீர்வினை பெற்றுத்தரக்கூடிய தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More