Headlines

கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் நடவடிக்கையை உடன் கைவிடுங்கள் – பாராளுமன்றில் அமைச்சர் றிஷாத்

-ஊடகப்பிரிவு புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியது போல இந்த அரசாங்கமும் கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு போய் அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாதென்று பாராளுமன்றத்தில்  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்….

Read More

கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்க்க அழைப்பு

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – புத்தளம் மக்களுக்கு பெருந்தொந்தரவாகவும்,பாதிப்பாகவும் அமையப்போகும் கொழும்பு – புத்தளம் குப்பைத்திட்டத்தை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான அழைப்பினை கொழும்பு –புத்தளம் குப்பைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் விடுத்துள்ளது. மேற்படி இயக்கம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள பிரசுரமொன்றின் மூலம் இந்த அழைப்பினைவிடுத்துள்ளது. – அந்த பிரசுரத்தில் தெரவிக்கப்பட்டுள்ள விடயங்களாவன – புத்தளம் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையவுள்ள இந்த திட்டம் தொடர்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது மக்களினால் முன்னெடுக்கப்பட்ட…

Read More

தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கை பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது மற்றுமொரு ட்ரக் வண்டியொன்றில் குப்பை கொட்டுவதற்கு வந்தவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று பொலன்னறுவை நீதவான்…

Read More

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள்

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கிரமமின்றி குப்பைகள் அகற்றப்படுவது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திர சாதனங்களின் உதவி நாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் குப்பை அகற்றுவதற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்வது சிரமமானது என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

களனி ஆற்றில் குப்பை : 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

களனி கங்கையை மாசுபடுத்திய குற்றச்சாட்டில் 7 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பொலிஸ் கடற்படை பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது!

களனி கங்கையில் குப்பைக் கொட்டிய 28 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேலியகொட மற்றும் வத்தளை பொலிஸாரும் கடற்படை அதிகாரிகளும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஹேகித்த மற்றும் ஹெமில்டன் பகுதிகளிலும் நீர்நிலைகளில் குப்பை கொட்டிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக குறித்த பிரதேசங்களின் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை…

Read More

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகள் நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்றப்படும்

கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளைய தினத்திற்குள் (10) முற்றாக அகற்ற முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 250 பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொலன்னாவை பகுதியின் சில இடங்களில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Read More

கொழும்பில் 2500 டொன் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு…

Read More