கல்ஹின்னை சம்பவம் இனவாதமல்ல!
-விடிவெள்ளி ARA.Fareel- கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவம் இனவாத செயலல்ல. மது போதையில் இருந்தவராலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுவொரு சிறிய விடயம் இதனை பெரிது படுத்த வேண்டாம். பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள் என அங்கும்புர இஹலமுல்ல பன்சலையின் இஹலமுல்ல சுகுன குணவன்ச தேரர் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சரிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலீம் “கல்ஹின்னை சம்பவத்தினையடுத்து சிலர் இனவாதத்தைத்தூண்ட முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது….
