Headlines

பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்­சே­காவின் பிர­தேச அபி­வி­ருத்தி அமைச்­சுக்­கான 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா குறை­நி­ரப்பு நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு பாரா­ளு­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  பிரதேச அபி­வி­ருத்தி அமைச்­ச­ரான பீல்ட் மார்ஷல் சரத் ­பொன்­சேகா தனது அமைச்­சுக்கு 59கோடியே 29 இலட்­சத்து 25ஆயிரம் ரூபா­வுக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை சமர்ப்­பித்தார். இத­னை­ய­டுத்து இடம்­பெற்ற விவா­தங்­களை தொடர்ந்து இத்­தொ­கையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…

Read More

பொன்சேகாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர்நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24) தள்ளுபடி செய்தது. சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதைத் தடுக்குமாறு, இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மாற்றுக் கொள்கைளுக்கான நிலையத்தின் சார்பில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் பாக்கியசோதி சரவணமுத்துவினால்,…

Read More

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது. அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும். குறித்த மனு மீதான விசாரணை மீண்டும்…

Read More

கொலை செய்ய வந்தவரை விடுவியுங்கள்

‘என்னைக் கொலை செய்ய வந்தவருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்’ என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

பொன்சேகாவின் நியமனத்தை எதிர்த்து மற்றுமொரு மனு தாக்கல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் நியமித்தது செல்லுபடியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான மேஜர் அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத அவரை நாடாளுமன்ற உறுப்பினரான நியமித்துள்ளதன் மூலம் அந்த கட்சி மக்களின் உரிமையை மீறியுள்ளதாக மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கிரிக்கெட் வீரர்களுடன் போர் உபாயங்களை பகிர்ந்து கொண்ட சரத் பொன்சேகா!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா  நேற்று ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு உத்தியோகபற்றற்ற விஜயத்தை மேற்கொண்டு  கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது இலங்கை கிரிக்கெட் அணி சவால்களை வெற்றிக்கொள்வது தொடர்பில் அவர் கலந்துரையாடினார். ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரிலேயே சரத் பொன்சேகா இந்த விஜயத்தை மேற்கொண்டார். இலங்கை இராணுவம் எதிரிகளை வெற்றிக்கொள்ள பயன்படுத்திய உபாயங்கள் குறித்து அவர் இதன்போது இலங்கை கிரிக்கட் அணி வீரர்களுக்கு தெளிவுப்படுத்தினார்.

Read More

சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

தேசிய ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரான பீல்ட் ­மார்ஷல் சரத் பொன்­சேகா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார் நேற்று (10) நாடா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மான போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணஞ் செய்து கொண்டார். மறைந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குண­வர்­த­ன வின் மறை­வை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்கே சரத்  பொன்சேகா  நியமிக்கப்பட்டார்.

Read More

பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் சரத் பொன்சேகா

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்று, மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக…

Read More

சரத்­பொன்­சேகா நாளை எம்.பி. யாக பதவியேற்பு

ஜன­நா­யகக் கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத்­பொன்­சேகா நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொள்வார் என அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை இவ­ருக்கு “படை­யினர் நலன்­பு­ரிகள் அமைச்சர் ” பதவி வழங்­கப்­படும் என்றும் அறி­ய­வ­ரு­கி­றது. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் பங்­காளிக் கட்­சி­யாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் ஜன­நா­யகக் கட்சி கடந்த மூன்றாம் திகதி புதன் கிழமை இணைந்து கொண்­டது. இது தொடர்­பான இரு தரப்­புக்கும் இடையே புரிந்­து­ணர்வு…

Read More

ஜனநாயகக் கட்சி, ஐ.தே.க.வுடன் நாளை இணையும்

பீல்ட் மார்ஷல்  பொன்சேகாவின் தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகக் கட்சி, நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read More

பொன்சேக்காவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவு

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார். பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இன்று…

Read More