Headlines

வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காசோலை கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுமார் 45 மில்லியன் ரூபா பெறுமதியான இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கவுள்ளார்

Read More