Headlines

சகவாழ்வை ஏற்படுத்துவோம் – அமைச்சர் ருவன் விஜேவர்த்தன

நாட்டில் இருந்த இனப்பிரச்சினையை தீர்த்து இனங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவே இணக்க அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் 20 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கட்சியை பாதுகாத்துவந்த ஆதரவாளர்களுக்கு சேவைசெய்யும் காலம் கனிந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதி மல்வான அல் முபாரக் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

Read More

பாதுகாப்பு செயலாளரின் யோசனையை நிராகரித்த ஜனாதிபதி?

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். வடக்கு கடலில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்திருந்தார். எனினும் இந்த யோசனையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, வார இறுதி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எந்தவொரு காரணத்திற்காகவும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படாது.அவ்வாறு…

Read More

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள்

குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கிரமமின்றி குப்பைகள் அகற்றப்படுவது தொடாபில் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குப்பைகளை அகற்றுவதற்காக இயந்திர சாதனங்களின் உதவி நாடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் குப்பை அகற்றுவதற்காக பணியாளர்களை இணைத்துக்கொள்வது சிரமமானது என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More

‘மென் சக்தியின் தாக்கம் சக்திவாய்ந்தது’

ஜே.ஏ.ஜோர்ஜ் ‘உலக நாடுகளில் கடின சக்தியின் எதிர்விளைவுகள் அதிகரித்துள்ளதையடுத்து, மென் சக்தி மற்றும் அதன் தாக்கம் அண்மையகாலத்தில் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. இதனை அண்மையில் ஏற்பட்ட அரபு வசந்தத்தில் காண முடிகிறது. மென்மையான சக்தி பரவலாகியுள்ளதுடன் தேசிய வலிமைக்கான ஒரு முக்கியமான காரணியாக இப்போது மாறியுள்ளது’ எனப் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2016’ இல் கலந்துக்கொண்டு சிறப்புரை…

Read More

இன்று பாதுகாப்பு மாநாடு!

கொழும்பு பாதுகாப்பு மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. வலயம் மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு அதற்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில், உள்நாட்டு மற்றும் வௌிநாடுகளை சேர்ந்த புத்திஜீவகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு இராணுவ தளபதி லுத்தினல் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின்…

Read More

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது – ஜனாதிபதி

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பு பிரதானி ஒருவர் புர்காவை தடை செய்ய வேண்டுமென யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத செயற்பாடுகளினால் நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உண்டா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பாவின்…

Read More

முஸ்லிம்களை சந்தேகம்கொண்டு பார்க்க முடியாது : பாதுகாப்பு அமைச்சு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை  இராணுவத்தின் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படமாட்டாது.. தேசிய பாதுகாப்பில் வடக்கு கிழக்கும் உள்ளடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச  பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கைக்கு இருந்த போதிலும் இலங்கை  முஸ்லிம்கள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…

Read More

155 சட்டவிரோத ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைப்பு

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்தின் கீழ் இதுவரை 155 ஆயு­தங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்­வரும் மே 6 ஆம் திகதி முடி­வ­டை­கி­றது. இக்­கா­லத்­தினுள் கைய­ளிக்­கப்­படும் ஆயுதம் தொடர்பில் எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் ஆயு­தங்­களை கைய­ளிப்­ப­வர்­க­ளுக்கு அவற்றின் வகை­க­ளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்­கப்­ப­டு­வ­தாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திக­தியின்…

Read More