Headlines

எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போதுதான் உரியவர் தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளது. இனிவரும் எந்தவொரு சவாலையும் துணிந்து எதிர்க்க தயாராவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 சம்மேளனம்   நேற்று குருணாகலில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு வரவேற்புரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இன,மத அடிப்படையிலான வேறுபாடுகள் எவையும் இருக்கவில்லை. அதுவே கட்சியின் உருவாக்க தந்தையான…

Read More

வருமானத்தை அதிகரிப்பது அவசியம் – துமிந்த

மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனவே, வட்வரி திருத்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் துமிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

மஹிந்தவுக்கு ஆட்சிக்கு வரமுடியாது

மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு மீண்டும் நாட் டில் ஆட்­சிக்கு வர முடி­யாது. அர­சி­யலில் ஈடு­ப­டலாம் எனத் தெரி­வித்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லா­ளரும், அமைச்­ச­ரு­மான துமிந்த திஸா­நா­யக்க, தனிப்­பட்ட ரீதியில் மஹிந்த மீது எனக்கு மதிப்­புள்­ளது. ஆனால் அவ­ரது குடும்ப ஆக்­கி­ர­மிப்பு அர­சியல் கொள்­கை­களை எதிர்க்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார்.

Read More

மஹிந்தவிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட முடியாத இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க முடியாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மஹிந்தவை எவ்வாறு அழைப்பது : துமிந்த திசாநாயகவுக்கு சந்தேகம்

– ஆர்.யசி – மஹிந்த ராஜபக்ஷவை ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (3) கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்….

Read More

இலங்கையில் 818 பேர் கைது

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி தொடக்கம்  இன்றைய தினம் வரை குடி போதையில் வாகனம் செலுத்திய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமானவர்கள் என பொலிஸார் ஊடக பேச்சாளர் காரியாலயம் சுட்டிக்காட்டியது. குடி போதையில் வாகனம் செலுத்துவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கைகள் கடந்த 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More