Headlines

பதவி விலகுவதாக டலஸ் அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். vk

Read More

உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லையென அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடையாமையினாலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் காலை பிடித்து இழுப்பது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

Read More

தேர்தலுக்கு அரசாங்கம் பயப்படுகிறதாம்- டலஸ் கண்டுபிடிப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் தள்ளிப் போட்டு வருவதற்குக் காரணம் தேர்தலை முகம் கொடுக்கவிருக்கும் பயத்தினாலேயே ஆகும் என கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தொகுதி நிர்ணயம் செய்வதற்கு எடுக்கும் தாமதமே இதற்குக் காரணம் என அரசாங்கம் சாட்டுப் போக்குத் தெரிவித்து வருகின்றது. அப்படியானால், அரசாங்கம் ஏன் தொகுதி நிர்ணயம் செய்வதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளைக் கலைத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Read More

மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளைய தினம் (19) பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐ.டி.என் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐ.டி.என் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறுகின்றன….

Read More