ஞானசாரரை கைது செய்திருந்தால், வன்முறை வெடித்திருக்கும் – பசில்
அளுத்கமையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்திருந்தால் நாடெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உருவாகியிருக்கும். இதனாலேயே ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார் . பத்தரமுல்லை,நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, அளுத்கமயில் பொதுபலசேனா ஏற்பாடு செய்த…
