Headlines

ஷகீப் சுலைமான் கடத்தலில் மூளையாக செயற்பட்டவர் கைது…

பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல எவ­னி­யூவில் இருந்து கடத்தி படு­கொலை செய்­யப்­பட்ட 29 வய­து­டைய இரு பிள்­ளை­களின் தந்­தை­யான சகீப் சுலை­மானை கடத்தல், படு­கொலை திட்­டத்தை நெறிப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பிர­தான சந்­தேகநபர் ஒரு­வரை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த 8 சந்­தேக நபர்­க­ளுக்கு சொந்­த­மான 13 தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யி­லேயே பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும் கொலை செய்­யப்­பட்ட வர்த்­த­கரின் நம்­பிக்­கைக்­கு­ரிய சேவ­க­ரான சந்­தேக நபரின் சகோ­தர முறை­யி­லான…

Read More

கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று (6) பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது மனித உடற்பாகங்கள் இருக்குமானால் அது தொடர்பில் மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதவான உத்தரவிட்டுள்ளார். இதேவேளை இந்தக் கொலை சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் கைத்தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக ஐந்து தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து முழுமை…

Read More

நாடகமாடிய வர்த்தகர் கைது

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்வதற்காக…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை: 8 பேருக்கு விளக்கமறியல்

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(05) உத்தரவிட்டது. சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை பெயர், ஊர் விவரங்களை வெளியிட வேண்டாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஷகீப்பின் நாக்கு தொங்கியது!

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்ற விடயத்தை, கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி – கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்கு…

Read More

சுலைமான் கொலை – மேலும் ஐவர் கைது

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும் ஐவர் கைது…

Read More

கொலையாளிகள் மாவனல்லையில் தலைமறைவு?

பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் 8 வர்த்தகர்களின் சாரதிகளிடமும் விசாரணை தொலைபேசி அழைப்புக்கள் குறித்தும் ஆய்வு விசாரணைக்கு 20 பொலிஸ் குழுக்கள் கொழும்பு,பம்­ப­லப்­பிட்டி, கொத்­த­லா­வல எவ­னியூ பகு­தியில் கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலைமானை படு­கொலை செய்த கொலையாளிகள் மாவ­னெல்லை பகு­தியில் தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இந்நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய 20…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த…

Read More

வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை திசை திருப்பவே கப்பம் கோரப்பட்டது

விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி கடத்தப்பட்ட நிலையில் அண்மையில் மாவனெல்ல பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பேருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், சுலைமான் கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களுக்குள்…

Read More

பம்பலப்பிட்டி மாணவி கடத்தல், விடுவிக்க 75 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்படுகிறது

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் (25) பொலிஸார் தெரிவித்துள்னர். மேலும்,…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More