ஜனாதிபதிக்கு அஸ்கிரி பீடாதிபதி பாராட்டு!
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி பாராட்டுக்குரியது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல ஸ்ரீ சலவான போதிமலு விஹாரையில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… நல்ல சிங்கள பௌத்தர் ஆகிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதான எண்ணங்களுடன் நாட்டின் அனைத்து இன சமூகங்கள் மற்றும் மதங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாகும்….
