Headlines

பிரதமர் நாடு திரும்பினார்!

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.15 மணியளவில் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழுவினர் சீனா நோக்கி பயணித்தனர். அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் பிரதமரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். குருநாகல் நகரபிதாவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கைக்கு அமைய நடுநிலைமையுடன் செயலாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More