Headlines

அனுரகுமாரவின் சவால் உலக நகைச்சுவையாகும்: விமல் வீரவன்ச

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் சவால் உலக நகைச்சுவையாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். சொந்தக் கட்சியில் போட்டியிட்டு நகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டிக் காட்டுமாறு அனுரகுமார சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… கடந்த மாகாணசபை தேர்தலின் போது ஒரு ஆசனத்தையேனும் ஜே.பி.பி.யினால் வெற்றியீட்டிக்கொள்ள முடியவில்லை. எனினும் தேசிய சுதந்திர முன்னணி ஓரு ஆசனத்தை வென்றிருந்தது. இவ்வாறான ஓர் நிலைமையில்…

Read More

இனவாதம் புதிதாய் தோன்றியுள்ளது!

உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கரை தோன்றா வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார். அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக மாறும்…

Read More

விரைவில் அலரிமாளிகையை கைப்பற்றுவோம் – ஜே.வி.பி

மக்களின் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவம் தீர்வன்று என்பதை மீள வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அலரிமாளிகையில் எங்களுக்கும் அறை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அலரிமாளிகையில் எங்களுக்கு அறையில்லை. ஆனால், விரைவில் அதனை கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளது. ஹெவலொக் நகரத்தின் பி.ஆர்.சி மைதானத்தில் நேற்று (1) இடம்பெற்ற, ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திலேயே இக்கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்றுகூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய ஜே.வி.பி  அநுர குமார திஸாநாயக்க, ‘தற்போது, வடக்கிலும் தெற்கிலும் கூட, மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டை ஆளும் திறனற்றதாக…

Read More

மலைய மக்களுக்கு இலங்கையர் என்ற கௌரவம் வழங்க வேண்டும்

மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என அடையாளப்படுத்துவதை ஒழித்து இலங்கையர் என்ற கௌரவத்தை வழங்கவேண்டும் என  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற  உறுப்பினருமான  அனுரகுமார  திசாநாயக்க  தெரிவித்தார். இந்த விடம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில்  அவர் இவ்வாறு வலியுறுத்தினார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை  தீர்ப்பதற்கு விசேட அதிகாரசபை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அதற்காக  அதிகளவிலான நிதியை அரசாங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இலங்கை சுதந்திரம் அடைந்து 67…

Read More

எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்

எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார். உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும்…

Read More

1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்

1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார்….

Read More

கல்விக்கான நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது! அனுரகுமார

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு நடைமுறைச்சாத்தியமற்றது என்று அனுரகுமார திசாநாயக்க விமர்சனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அனுரகுமார திசாநாயக்க, அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 5.41 வீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைச்சாத்தியமற்றது. எனினும், கல்விக்காக முன்னுரிமை கொடுக்கப்படுவது அத்தியாவசியமானது என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று…

Read More

அனுர குமார கூறு­கின்றார் என்­ப­தற்­காக பத­வி விலக முடி­யாது

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க கூறு­கின்றார் என்­ப­தற்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. நான் அமைச்­ச­ராக இருக்­க­வேண்­டுமா இல்­லையா என்­ப­தனை ஜனா­தி­ப­தியும் பிர­த­ம­ருமே தீர்­மா­னிக்­க­வேண்டும் என்று நீதி­ய­மைச்சர் விஜய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மக்கள் விடு­தலை முன்­னணி கூறு­வதைப் போன்று முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை எமது அர­சாங்கம் கைது­செய்­தி­ருந்தால் அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார்கள். ஆனால், சட்­டத்­துக்கு முர­ணாக நாங்கள் எத­னையும் செய்ய முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார். எவன்ட் கார்ட்…

Read More

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மாரடைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு அவரை ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தீவிரமில்லை என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Read More