Headlines

கிழக்கு முதலமைச்சரின் அநாகரிகங்களுக்கு முடிவுகட்டவுள்ளோம் – அமீர் அலி

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த நல்லாட்சிக் காலத்தில் குறுநில மன்னர்போல் அராஜக ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கெதிராக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வரத் தயாராகிறோம் என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற ஆற்றலுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…

Read More

அமைச்சர் றிஷாத் அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அரசுக்கு தொடர்ந்தும் நான் அழுத்தங்களை கொடுப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று நானாட்டான் கலாச்சார மண்டபத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை )  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத்  பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.  இங்கு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நானாட்டான் பிரதேச அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்…

Read More

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

அண்மையில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், அடம்பனைச் சேர்ந்த கே.ரஜீவனுக்கு நேற்று அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பதையும்,அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனையும் படத்தில் காணலாம்.

Read More

பிரான்ஸ் படுகொலை சம்பவம் : அமைச்சர் றிஷாத் அனுதாபம்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்றிடம்பெற்ற துயரச் சம்பவத்தை அறிந்து மிக வேதனையும் கவலையும் அடைவதாக தெரிவித்துள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உலக நாடுகள் மத்தியில் அமைதிமிக்க நாடாக வர்ணிக்கப்படும் பிரான்ஸில் நேற்று வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 150க்கு மேற்பட்டோர் உயிரிழந்தும் பல நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரத்தை தோற்றுவித்துள்ளது. பரிஸ் தலைநகரத்தை…

Read More

அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஜெமீல் பதவியேற்பு

– அஸ்ரப் ஏ சமத் – அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் அமைச்சா் றிஷாத், அமைச்சா் பைசா் முஸ்தபா, பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். இந் நிறுவனம் பற்றி பொதுமுகாமையாளா் தெரிவிக்கையில்…

Read More

தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –  சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…

Read More

றிஷாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல்…

Read More

ஜனாதிபதி தலைமையில் முஸ்லிம்கள் தொடர்பில் விசேட கூட்டம்

– அஸ்ரப் ஏ சமத் – வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.ப 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. இதில் அமைச்சா்களான  றிஷாத் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன்,  ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட், வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்….

Read More

முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு

– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான  ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு, ஜனாதிபதி அழைப்பு.

வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி அழைப்பு. 11 ஆம் திகதி புதன்கிழமை இக் கூட்டம் இடம் பெறுகின்றது. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியும்,பிரதமரும்,மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடும் தொனியில் பேசியதையடுத்து இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

Read More

முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வியினை உருவாக்குவது எமது கடமை

எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அரசியல் என்னும் ஆயுதத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியினை உருவாக்குவது எமது அனைவரினதும் கடமையாகும் என்றும் கூறினார. புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (6) மாலை பாபடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் மாஹிரா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்…

Read More

முஸ்லீம் விடயத்தை தனி நபர் பிரேரணையாக முன்வைத்த றிப்கான் பதியுதீன் (VIDEO)

வட மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக அதீத அக்கறை கொள்ள வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் 37 ஆவது மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருதத்து தெரிவிக்கையில் வட மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால மீள்குடியேற்றங்களும் என்ற ரீதியில் தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன். இம்மக்கள் 1990 ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேறியதில்…

Read More