Headlines

இஸ்லாமிய விரோதிகளின் எண்ணங்களுக்கு தீனி போடும் வகையில் நமது சமூகத்தின் செயற்பாடுகள் அமையக் கூடாது

இஸ்லாமிய விரோதிகளினதும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களினதும் எண்ணங்களுக்குத் தீனிபோடும் வகையில் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் அமையக் கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். முஸ்லிம் திருமணச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் திருமண விடயத்தில் எழுந்தமானமாகவும், மனம்போன போக்கிலும் நடந்துகொள்வதாக, நமது சமூகத்தை நோக்கிய குற்றச்சாட்டுக்கள் தற்போது வலுவடைந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கண்டிக் கிளைக்கு நேற்றுக் காலை (13/10/2016) விஜயம் செய்த அமைச்சர், ஜம்இய்யதுல்…

Read More

மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத்

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மாத்தளை, உக்குவெல உம்மு சலாமா பெண்கள் அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் இஸ்லாமியப்…

Read More

உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு செய்யும் சேவை­களைப் பாராட்­டிய உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்லா பின் முஹ்சின் அல்­துர்க்கி உலமா சபையின் சேவை­க­ளுக்கு முடி­யு­மான உத­வி­களை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார். இலங்­கையில் நடை­பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு வருகை தந்­தி­ருந்த உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் அல்­துர்க்கி கொழும்­பி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு விஜயம் செய்தார். அவரை…

Read More

சர்­வ­தேச மாநாட்டில் ரிஸ்வி முப்தி

பல்­லின மக்கள் வாழும்  இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரான  முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இன மக்­க­ளுடன்  சமா­தான சக­வாழ்வு வாழ­வேண்­டு­மென அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபை  முஸ்லிம் சமூ­கத்தை  அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதற்­க­மைய  இலங்கை  முஸ்­லிம்கள் அனைத்து இன­மக்­க­ளு­டனும்  நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­கி­றார்கள். இலங்கை, முஸ்­லிம்­களின் தாய் நாடு என்­பதில் நாம் உறு­தி­பூண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். நேற்­றுக்­காலை அலரி மாளி­கையில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும், எனும்…

Read More

இஸ்லாத்துக்கு முரணான IS உடன், இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

Forum for National Unity என்ற அமைப்பினால் நேற்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாராட்டுவதற்காக, வெள்ளவத்தை The Excellency மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் உரையாற்றுகையில், ISIS என்பது இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். இதே வைபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர் செய்துவரும் சூழ்ச்சிபற்றியும் குறிப்பிட்டார். போலி ஈரானிய பாஸ்போட்டில்…

Read More

அனைவரும் கை­கோர்க்க வேண்டும் – ரிஸ்வி முப்தி

இந்­நாட்டு முஸ்­லிம்கள் தமது முன்­னோர்­களால் பெற்றுத் தரப்­பட்ட உரி­மை­களைப் பாது­காத்துக்  கொள்­வதில் அர­சியல் மற்றும் பிரி­வு­களை மறந்து கை­கோர்க்க வேண்டும். கிடைத்­துள்ள உரி­மை­களைப் பறி­கொ­டுத்து விடாது  உள்­ளதைப் பாது­காத்துக் கொள்­வதில் நாம் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தலை­வ­ராக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வரு­டாந்த மாநாடும் புதிய நிர்­வா­கிகள்…

Read More

ஜம்இய்யத்துல் உலமா தலைவராக மீண்டும் ரிஸ்வி முப்தி!

மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகத் தெரிவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (24.07.2016) பி.ப. கண்டி லைன் பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்திலேயே இத்தெரிவு இடம்பெற்றது. சுமார் 25 மாவட்டங்களிலுள்ள மாவட்டக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் ஆகியோரே மத்திய சபையின் அங்கத்தவர்கள் ஆவர். சுமார் 75 பேர்கள் கொண்ட இச்சபையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 25 பேர்கள் நிறைவேற்றுக்…

Read More

ஜம்­இய்­யத்துல் உலமா, வன்­மை­யாகக் கண்­டிக்கிறது..!

மதீ­னாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்ள மஸ்­ஜிதுந் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ரமழான் மாதத்தின்  இறுதி நாளில் முஸ்­லிம்­களின் புனித இட­மான முஸ்­ஜிதுல் நபவி பள்­ளி­வா­ச­லுக்கு முன்பு அப்­பாவி மக்­களை இலக்­கு­வைத்து தீவி­ர­வா­திகள் மேற்­கொண்ட தற்­கொலை குண்டு தாக்­கு­தலில் 5…

Read More

தலைப்­பிறை பார்க்­கும் மாநா­டு

ஹிஜ்ரி – 1437 புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் நாளை 5 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்பு இடம்­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய மாலை 6.31 மணி­முதல் புனித ஷவ்வால் மாதத்தின் தலைப்­பி­றையைப் பார்க்­கு­மாறும் பிறையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் நேரிலோ அல்­லது கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கங்­களில் ஏதா­வது ஒன்றின் ஊடாக அறி­யத்­த­ரு­மாறும் சகல முஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரி­ய­பள்­ளி­வாசல் கேட்டுக்…

Read More

ஒலிபெருக்­கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு

– ARA.Fareel- – நாட்டின் சில பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் மாத சமய வழி­பா­டுகள் ஒலிபெருக்­கிகள் மூலம் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பாடுகள் கிடைத்­துள்­ளன. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அருகில் பல பௌத்த பன்­ச­லைகள் இருக்கும் பிர­தே­சங்­க­ளிலும் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் இவ்­வாறு நடாத்­தப்­ப­டு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­தாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளே மாத்­திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்­ளப்­பட…

Read More

மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை, துரிதப்படுத்த ஜம்மியத்துல் உலமா அழைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின்…

Read More

ஞான­சாரரின் கருத்துக்கு, ஜம்­இய்­யத்துல் உலமா கண்­டனம்

– பரீல் – அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யினால் அங்­கீ­காரம் பெற்­றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்­ப­டை­வாத குழு என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டுள்­ள­மைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்­க­ளி­டையே நற்­பண்­பு­க­ளையும் சகோ­த­ரத்­து­வத்­தை­யுமே போதித்து வரு­கி­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தே­யன்றி அடிப்­ப­டை­வா­தத்தைப் போதிக்­க­வில்லை என  அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச்­செ­ய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா…

Read More