2020இல் புகைப்பிடித்தல் முற்றாகத் தடை
2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாகத் தடை செய்ய சுகாதார சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போது,சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள்…
